கோவை TNAU-வில் R-நிரலாக்கத்துடன் தரவு பகுப்பாய்வு பயிற்சி

கோவை TNAU-வில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை R-நிரலாக்கத்துடன் தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தலுக்கான 5 நாள் செயல்சார் பயிற்சி நடைபெற்றது. பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தகவல் துறை சார்பில் R-நிரலாக்கத்துடன் (R-Programming) தரவு பகுப்பாய்வு (Data processing) மற்றும் காட்சிப்படுத்தலுக்கான ஐந்து நாள் செயல்சார் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 முதல் ஆகஸ்ட் 2 தேதி வரை நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் கோளூர் ஆராய்ச்சி பண்ணை (பெங்களூர்), பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி (கோழிக்கோடு), கலசலிங்கம் அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன் (கிருஷ்ணன்கோயில்), ICAR-கரும்பு வளர்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.



தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் ஏ. ஜான் ஜோயல் வரவேற்புரை வழங்கினார். ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு மற்றும் R நிரலாக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மைய இயக்குநரும், முதுநிலைப் பட்டமேற்படிப்புப் பயிலக முதன்மையருமான முனைவர் டி.சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். R ஐப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

பயிற்சியில் R நிரலாக்க அடிப்படைகள், தரவு இடைமுகங்கள், R தொகுப்புகள், புள்ளியியல் கருத்துகளின் அடிப்படைகள், தொடர்பு, இணைவு, பின்னடைவு, chi-squared test, ANOVA போன்ற அடிப்படை புள்ளிவிவர பகுப்பாய்வு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர்களான முனைவர் ந. சரண்யா (உயிர் தகவலியல்), முனைவர் சந்தோஷ் கணபதி பாட்டீல் (புள்ளியியல்) மற்றும் முனைவர் T.T. திவ்யப்பிரபா (திட்ட விஞ்ஞானி) ஆகியோர் R பயிற்சி அளித்தனர்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் இ. கோகிலாதேவி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...