பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகர பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தொகுதி வாரியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் அவர், இன்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நன்றி தெரிவித்த ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் இல்லாத அளவுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி" என்று தெரிவித்தார். மேலும், வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...