பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகர பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தொகுதி வாரியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் அவர், இன்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நன்றி தெரிவித்த ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் இல்லாத அளவுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி" என்று தெரிவித்தார். மேலும், வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...