பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகர பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தொகுதி வாரியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் அவர், இன்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நன்றி தெரிவித்த ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் இல்லாத அளவுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி" என்று தெரிவித்தார். மேலும், வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...