கோவையில் புத்தக வெளியீட்டு விழா: அரசியல் தலைவர்கள் சந்திப்பு

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை, சீமான் ஆகியோர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அண்ணாமலைக்கு வணக்கம் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பழனிவேல் எழுதிய "GUTS" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவையின் பிரபல மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



விழா தொடங்கியவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேலு குறித்து பேசினார். பின்னர் மேடையிலிருந்து இறங்கி வந்த அண்ணாமலை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர்.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விழா அரங்கிற்குள் வந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அண்ணாமலையுடன் கைகுலுக்கினார், மற்றவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், அண்ணாமலைக்கு முன்பாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அண்ணாமலை நிகழ்ச்சி அரங்கிலிருந்து கிளம்பினார்.

இறுதியாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...