கோவையில் புத்தக வெளியீட்டு விழா: அரசியல் தலைவர்கள் சந்திப்பு

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை, சீமான் ஆகியோர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அண்ணாமலைக்கு வணக்கம் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பழனிவேல் எழுதிய "GUTS" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவையின் பிரபல மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



விழா தொடங்கியவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேலு குறித்து பேசினார். பின்னர் மேடையிலிருந்து இறங்கி வந்த அண்ணாமலை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர்.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விழா அரங்கிற்குள் வந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அண்ணாமலையுடன் கைகுலுக்கினார், மற்றவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், அண்ணாமலைக்கு முன்பாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அண்ணாமலை நிகழ்ச்சி அரங்கிலிருந்து கிளம்பினார்.

இறுதியாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...