கோவையில் புத்தக வெளியீட்டு விழா: அரசியல் தலைவர்கள் சந்திப்பு

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை, சீமான் ஆகியோர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அண்ணாமலைக்கு வணக்கம் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பழனிவேல் எழுதிய "GUTS" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவையின் பிரபல மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



விழா தொடங்கியவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேலு குறித்து பேசினார். பின்னர் மேடையிலிருந்து இறங்கி வந்த அண்ணாமலை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர்.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விழா அரங்கிற்குள் வந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அண்ணாமலையுடன் கைகுலுக்கினார், மற்றவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், அண்ணாமலைக்கு முன்பாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அண்ணாமலை நிகழ்ச்சி அரங்கிலிருந்து கிளம்பினார்.

இறுதியாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...