கோவையில் புத்தக வெளியீட்டு விழா: அரசியல் தலைவர்கள் சந்திப்பு

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை, சீமான் ஆகியோர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அண்ணாமலைக்கு வணக்கம் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பழனிவேல் எழுதிய "GUTS" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவையின் பிரபல மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



விழா தொடங்கியவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேலு குறித்து பேசினார். பின்னர் மேடையிலிருந்து இறங்கி வந்த அண்ணாமலை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர்.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விழா அரங்கிற்குள் வந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அண்ணாமலையுடன் கைகுலுக்கினார், மற்றவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், அண்ணாமலைக்கு முன்பாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அண்ணாமலை நிகழ்ச்சி அரங்கிலிருந்து கிளம்பினார்.

இறுதியாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...