கோவையில் புத்தக வெளியீட்டு விழா: அரசியல் தலைவர்கள் சந்திப்பு

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை, சீமான் ஆகியோர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அண்ணாமலைக்கு வணக்கம் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பழனிவேல் எழுதிய "GUTS" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவையின் பிரபல மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



விழா தொடங்கியவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேலு குறித்து பேசினார். பின்னர் மேடையிலிருந்து இறங்கி வந்த அண்ணாமலை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர்.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விழா அரங்கிற்குள் வந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அண்ணாமலையுடன் கைகுலுக்கினார், மற்றவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், அண்ணாமலைக்கு முன்பாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அண்ணாமலை நிகழ்ச்சி அரங்கிலிருந்து கிளம்பினார்.

இறுதியாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...