பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட் எதிர்ப்பு: காதில் பூ அணிந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நூதன போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காதில் பூ அணிந்து நூதன முறையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நாமம் போட்ட பதாகைகளை ஏந்தியவாறும், காதில் பூவை சுற்றிக் கொண்டும் நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.



போராட்டக்காரர்கள் "தமிழ்நாட்டுக்கு கோவிந்தா, பாஜகவுக்கு கோவிந்தா, தமிழ்நாடு திட்டங்களுக்கு கோவிந்தா" என்ற கோஷங்களை எழுப்பினர்.



இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....