மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கா இந்திய பவுண்டேஷன் சார்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், "சமுதாயத்தில் என்ன கற்றுக் கொண்டோமோ அதை திருப்பி சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது நமது கடமை. நாம் படித்தோம், நாம் சம்பாதித்தோம், நன்றாக இருக்கிறோம் என்று என்னாமல், இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்கும் மாணவர்களாக உருவாக வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பாடம் நடத்திக் கொண்டே இருந்தால் சலிப்பு ஏற்படும். இதனால் கற்றல் திறனை, செயல் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் முழு ஒத்துழைப்பு தேவை. கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும். பள்ளிக்கூடம் என்பது உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும்," என்று கூறினார்.



இந்த விழாவில் கிணத்துக்கடவு பேருராட்சி தலைவர் கதிர்வேல், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...