மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கா இந்திய பவுண்டேஷன் சார்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், "சமுதாயத்தில் என்ன கற்றுக் கொண்டோமோ அதை திருப்பி சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது நமது கடமை. நாம் படித்தோம், நாம் சம்பாதித்தோம், நன்றாக இருக்கிறோம் என்று என்னாமல், இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்கும் மாணவர்களாக உருவாக வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பாடம் நடத்திக் கொண்டே இருந்தால் சலிப்பு ஏற்படும். இதனால் கற்றல் திறனை, செயல் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் முழு ஒத்துழைப்பு தேவை. கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும். பள்ளிக்கூடம் என்பது உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும்," என்று கூறினார்.



இந்த விழாவில் கிணத்துக்கடவு பேருராட்சி தலைவர் கதிர்வேல், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...