கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலம்

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, பழைய நினைவுகளை மீட்டெடுத்தனர்.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களுக்கான வெள்ளி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் உள்ள பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.



விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.



முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு, நண்பர்களுடன் உரையாடியும் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...