இஸ்லாம் குறித்து அறிய கிருஸ்தவ பாதிரியார்கள் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை

கோவையில் உள்ள நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்ற கிருஸ்தவ பாதிரியார்கள் சர்வ சமய நம்பிக்கைகளை அறிந்துகொள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர். இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்டு தெளிவடைந்தனர்.


கோவை: கோவை நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்று நாடெங்கும் பாதிரியார்களாக தேர்வாகியுள்ள கிருஸ்தவ பாதிரிமார்கள், சர்வ சமய நம்பிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள கோவையில் உள்ள வணக்கஸ்தலங்களுக்கு சென்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று (26 ஜூலை 2024) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர்.



நிகழ்வின் ஆரம்பமாக ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து ஹுதா பள்ளிவாசல் இமாம் மௌலவி ரியாஸுதீன் அஸ்ஹரி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.



நிகழ்வில் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு தெளிவடைந்தனர். கேள்விகளுக்கு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் பதிலளித்தார்கள்.



இந்நிகழ்வில் ஜமாஅத் கோவை பெருநகரச் செயலாளர் சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அமீரே மகாமிகள் பீர் முஹம்மது, முஹம்மது பஷீர் ஆகியோரும் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.



மேலும் ஜமாஅத்தின் ஊழியர்கள், உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...