கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைகள் கட்டி வாடகை வசூல் செய்த அதிர்ச்சி தகவல்

கோவை சரவணம்பட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகை வசூலித்த சம்பவம் அம்பலமானது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.



மேலும், அரசு நியாயவிலை கடைக்கு வாடகைக்கு விடப்பட்டு, அரசிடம் இருந்தே வாடகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த இடத்தில் வேறு ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பின், அவற்றையும் உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....