கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து: மாநகராட்சியின் தீவிர நடவடிக்கைகள்

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி மேற்கொண்ட விரிவான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள். தீயணைப்பு, மீட்பு பணிகள் மற்றும் செலவினங்கள் பற்றிய தகவல்கள்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் 6, 2024 அன்று மாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கோடைக்காலம் மற்றும் அதிக காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகள் எரியத் தொடங்கின.

இந்த தீ விபத்தின் காரணமாக வெள்ளலூர் சுற்றுப்புறங்களில் அதிகளவில் புகை மூட்டம் பரவியது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்கள், ஒவ்வொரு வாகனத்திற்கும் 14 தீயணைப்பு வீரர்கள் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க, நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 வரையிலான தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. தீ உச்சம் பெற்ற 12 நாட்களில், தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் வரை சுழற்சி முறையில் பணியாற்றினர். இதில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்குவர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் IAS, நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு IAS, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி IAS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

தீ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டதுடன், 24 மணி நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இத்தீ தடுப்பு பணிக்காக மொத்தம் ரூ.27.52 இலட்சம் செலவிடப்பட்டது. இச்செலவினங்கள் குறித்த விவரங்கள் ஜூலை 26, 2024 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்பட்டன.

தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்திய மாநகராட்சி ஆணையாளர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...