நீலகிரியில் வீட்டின் கூரையை உடைந்து உள்ளே விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைந்து குட்டி யானை வீட்டுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிபாலம் பகுதியில் வசித்துவருபவர் தவுபிக், இவரது மனைவி ஜெமீலா. அப்பகுதயில் சாலையோர மலைச் சரிவுக்குட்பட்டு வனப் பகுதியில் இத்தம்பதியினரின் வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் உறங்கிக்கொண்டிருக்கையில் திடீரென வீட்டின் கூரையை உடைத்து ஒரு யானைக் குட்டி உள்ளே விழுந்துள்ளது. இதனைக்கண்ட ஜெமீலா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். 



இதனிடையே வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை, வீட்டை விட்டு வெளியேற முறச்சித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதில் ஜெமிலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், தனது குட்டியை தேடி வந்த தாய் யானை, மேலும் சில யானைகளுடன் வீட்டின் வெளியே நின்றது. யானைக் கூட்டத்தைப் பார்த்து பதற்றமடைந்த ஜெமீலா மற்றும் அவரது மாமனார், மாமியார் மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



வெளியே நின்ற யானைக் கூட்டம், வீட்டின் சமையல் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று தனது குட்டியை மீட்டது. தொடர்ந்து, அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.



இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் கணேசன் மற்றும் வன ஊழியர்கள் ஜெமீலாவின் வீட்டை ஆய்வு செய்தனர். பின், கூடலூர் மருத்துவமனையில் காயமடைந்த ஜெமீலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...