கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், நாளை நடைபெறும் பாஜக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.


Coimbatore: கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய நா.கார்த்திக், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்து பாசிச பாஜக அரசைக் கண்டித்து, நாளை (ஜூலை 27) காலை 10 மணியளவில் கோவை சிவானந்தா காலனி, டாடாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து கழகத் தொண்டர்கள், அனைத்து கழக செயல்வீரர்கள், BLA-2, பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், கழக தொழிலாளர் அணி துணைச் செயலாளர் Lpf தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மகுடபதி, இரா.மணிகண்டன், மு.ம.ச.முருகன், ச.குப்புச்சாமி, ஆடிட்டர் சசிக்குமார், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், ச.கார்த்திகேயன், பகுதி கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, ஷேக் அப்துல்லா, மா.நாகராஜ், இரா.சேரலாதன், மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன், கோவை லோகு, அஞ்சுகம் பழனியப்பன், வம.சண்முகசுந்தரம், கே.பாக்கியராஜ், கே.எம்.ரவி, எ.எம்.கிருஷ்ணராஜ், அணிகள் அமைப்பாளர்கள் இரா.தனபால், சிவப்பிரகாஷ், டெம்போ சிவா, கராத்தே அர்ஜூன், ஆர்.கே.சுரேஷ்குமார், நா.பாபு, வழக்கறிஞர் அன்புச் செழியன், சிஆர்.கனிமொழி, மருதமலை ராஜ்குமார், அக்ரி பாலு, பூர்ணசந்திரன், வி.மணி, இலா.தேவசீலன், ஸ்ரீசத்யா கோவை தங்கம், எம்எம்.சஞ்சய்குமார், டி.கண்ணன் மற்றும் அணிகளின் துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...