பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடியில் நான்கு வழிச்சாலை பணி: அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் இப்பணி காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலும், காட்டம்பட்டி முதல் நெகமம் வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிகளை நேற்று (ஜூலை 23) கோவை வட்டம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் அளவு மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். நான்கு வழிச்சாலை சிறப்பாக அமைய வேண்டிய முறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணச் செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவடையும்போது, பொள்ளாச்சி-பல்லடம் இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...