கோவையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்

கோவை 36வது வார்டில் திமுகவின் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முகாமைத் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 36வது வார்டில் திமுகவின் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், "இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்" தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜூலை 25 அன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வடவள்ளி பகுதியில் உள்ள 36வது வார்டில் இந்த முகாம் நடைபெற்றது.



வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமசாமி பிள்ளை வீதி பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், துணை அமைப்பாளர்கள் கோவை அருண், லாரா பிரேம்தேவ், துரை பிரவீன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், கதிரேசன், தெய்வம் மகாலட்சுமி, மாமன்ற உறுப்பினர் லட்சுமி, அணிகளின் அமைப்பாளர்கள் வி.மணி, ராஜ்குமார் உள்ளிட்ட கழக அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், இளைஞர்கள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...