பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை: கோவையில் கல்லூரி மாணவர் கைது

கோவை குனியமுத்தூரில் பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த சம்பவம் வீதியில் தொல்லையாக மாறியது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவி சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. மாணவியும் அந்த பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்.

பெண் என நினைத்து மாணவி அவருடன் பழகி வந்தார். அந்த நபர் பெண்ணின் குரலில் பேசி பழகியதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர், அவர் தான் பெண் இல்லை என்றும் தனது பெயர் ஜூனைத் (வயது 22) என்றும் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் ஜூனைத் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். மாணவி பள்ளி செல்லும் வழியிலும், பல்வேறு இடங்களிலும் நின்று கொண்டு தொந்தரவு கொடுத்தார்.

சமீபத்தில், ஜூனைத் மாணவியின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, மாணவியின் தந்தை அவரை சந்தித்தார். ஜூனைத் அங்கிருந்து தப்பி ஓடும்போது அவரது செல்போன் கீழே விழுந்தது. அதில் மாணவியின் புகைப்படம் இருந்ததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேட்டபோது, ஜூனைத் தந்தைக்கு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜூனைத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...