இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது - குரு வணக்க நாள் விழாவில் குமரகுருபர சுவாமிகள்

கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள் இளைஞர்களின் போதை பழக்கம் குறித்து கவலை தெரிவித்தார். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டின் அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து விழா கொண்டாட வேண்டும் என்றார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணை தாளாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநருமான டாக்டர் குமாரசாமி தலைமை வகித்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு. மருதாசல அடிகளார், செஞ்சேரி மலை நந்தவன திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார், நிலக்கிழார் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வணிக வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.

விழாவில் குமரகுருபர சுவாமிகள் அருளாசி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், கெளமார மடாலயத்தின் வரலாற்றை விளக்கினார். 1890-ம் ஆண்டு சின்னவேடம்பட்டியில் ராமானந்த சுவாமிகளால் இம்மடாலயம் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அவரது முக்கிய கொள்கைகளாக கொல்லாமையும், புலால் உணவு மறுத்தலும் இருந்ததாகவும் கூறினார்.

குமரகுருபர சுவாமிகள் தொடர்ந்து பேசுகையில், "தற்போது நமது சமயத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதை நமது கண்முன் பார்த்து வருகிறோம். நமது இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். நமது மொழியையும் இழந்து வருகிறோம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதை பார்த்து வருகிறோம். இது வேதனை அளிக்கிறது," என்று கவலை தெரிவித்தார்.

மேலும், "குரு என்பவர் மடாதிபதிகள் மட்டுமல்ல ஆசிரியரும் குருதான். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டில் உள்ள அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து குரு வணக்க நாளை கொண்டாட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...