உக்கடம் சிஎம்சி காலனியில் வாக்குறுதி அளித்த வீடுகளை கட்டித்தர கோரிக்கை: இந்து மக்கள் கட்சி மனு

கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் வாக்குறுதியளித்த வீடுகளைக் கட்டித்தரக் கோரி இந்து மக்கள் கட்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மீன் மார்க்கெட் அகற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தருவதாக மாநகராட்சி அதிகாரிகளும் குடிசை மாற்று வாரியமும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை 222 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீதமுள்ள வீடுகளை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற வேண்டும் என்றும் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், "உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை 222 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வீடுகளை விரைவில் கட்டித் தர வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் காரணமாக சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை மாநகராட்சி ஆணையர் பெற்றுக்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...