ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான இந்த நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த பழங்குடியினருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், ஒயர்மேன், வெல்டர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.


சேரும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவற்றில் இலவச பேருந்து அட்டை, வருகையின் அடிப்படையில் மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை, இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், மிதிவண்டி ஆகியவை அடங்கும்.


மேலும், பயிற்சி முடித்த அனைவருக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். விடுதியின் காலியிடங்களைப் பொறுத்து உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55694, 99945-55884, 94430-15904, 99421-28234, 95002-49705, 98657-96373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...