ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான இந்த நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த பழங்குடியினருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், ஒயர்மேன், வெல்டர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.


சேரும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவற்றில் இலவச பேருந்து அட்டை, வருகையின் அடிப்படையில் மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை, இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், மிதிவண்டி ஆகியவை அடங்கும்.


மேலும், பயிற்சி முடித்த அனைவருக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். விடுதியின் காலியிடங்களைப் பொறுத்து உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55694, 99945-55884, 94430-15904, 99421-28234, 95002-49705, 98657-96373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...