மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டத்தை ஓஸ்மா சங்கம் வரவேற்பு

கோவையில், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கத் தலைவர் அருள்மொழி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டத்தை வரவேற்றுள்ளார். இத்திட்டம் தொழில்துறைக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


கோவை: மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் மத்திய பட்ஜெட்டை வரவேற்பதாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் அருள்மொழி இன்று ஜூலை 23 அன்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் தொழில்துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பட்ஜெட்டில் MSME நிறுவனங்கள் இயந்திரங்கள் வாங்குவதற்குப் பிணை இல்லாமல் கடன் பெற வகை செய்துள்ளது மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், MSME நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தும் போது ஏற்படும் காலதாமதத்திற்கு Special Mention Account (SMA) அடிப்படையில் வங்கி நிதி உதவி செய்து வங்கிக் கணக்கு NPA ஆகாமல் தடுக்க உதவி புரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு முதல் மாத சம்பளத் தொகையை மத்திய அரசு வழங்கும் என்பது தொழில் துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்று அருள்மொழி கூறியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டமும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...