கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை, புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.



இந்த நிகழ்வு முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.



வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வார்டு எண்கள் 36, 37, 38, 39, 40 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், கா.வேலுச்சாமி, தெய்வம் மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரிடம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், முரசொலி வெங்கடகிரி, அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருதமலை மகேஷ்குமார், சின்னதங்கம், பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...