கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை, புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.



இந்த நிகழ்வு முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.



வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வார்டு எண்கள் 36, 37, 38, 39, 40 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், கா.வேலுச்சாமி, தெய்வம் மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரிடம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், முரசொலி வெங்கடகிரி, அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருதமலை மகேஷ்குமார், சின்னதங்கம், பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...