கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை, புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.



இந்த நிகழ்வு முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.



வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வார்டு எண்கள் 36, 37, 38, 39, 40 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், கா.வேலுச்சாமி, தெய்வம் மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரிடம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், முரசொலி வெங்கடகிரி, அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருதமலை மகேஷ்குமார், சின்னதங்கம், பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...