ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: ரூ.13.99 லட்சத்திற்கு விற்பனை

ஆனைமலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், 432 மூட்டைகள் ரூ.13.99 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் தர கொப்பரை கிலோவிற்கு ரூ.92.59 வரை விலை பெற்றது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் என இரு வகையான கொப்பரை மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. முதல் தர கொப்பரையில் 162 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இவை கிலோவிற்கு ரூ.87.69 முதல் ரூ.92.59 வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரையில் 270 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இவை கிலோவிற்கு ரூ.43.43 முதல் ரூ.81.21 வரை விலை பெற்றன.

இந்த ஏலத்தில் மொத்தம் 194.40 குவிண்டால் கொப்பரை விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ.13.996 லட்சம் ஆகும். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...