கோவையில் பெயிண்டர் உயிரிழப்பு மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை: இரு தனி சம்பவங்கள்

கோவையில் பெயிண்டிங் வேலையின் போது விபத்தில் சிக்கி ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், உடல்நலக் குறைவால் மன உளைச்சலில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவை மாநகரில் இரு வேறு சம்பவங்களில் ஒரு பெயிண்டர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சம்பவத்தில், கோவை புலியகுளம் சிறுகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (49) என்ற பெயிண்டர், தனது மகன் சந்துரு (26) உடன் கடந்த 15 நாட்களாக குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். ஜூலை 22 அன்று, செல்வராஜ் ஏணியின் மீது ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, செல்வராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக, மகன் சந்துரு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் விசாரணையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக, குறிச்சி அழகு நகரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் முகமது அமீர் (43) மற்றும் கட்டிட மேஸ்திரி சின்னப்பராஜ் (52) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் (33) என்ற ஆட்டோ ஓட்டுநர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த கிருஷ்ணராஜ், ஜூலை 22 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...