பட்ஜெட்டில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை - மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

2024-25 மத்திய பட்ஜெட்டில் ஜவுளித் துறைக்கான எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் எம்.ஜெயபால் இது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.



கோவை: 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் ஜவுளித் துறையினர் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் எம்.ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜவுளித் துறையில் இந்தியாவிலேயே 47% திறனுடையது தமிழகம். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நலிவடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய அரசின் துறை சார்ந்த அமைச்சர்களிடம் விஸ்கோஸ் பாலீஷ்டர் பருத்தி இறக்குமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க கோரினோம். ஆனால், இந்த பட்ஜெட்டில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "மூலப் பொருட்களின் சர்வதேச விலையை விட 20-25 ரூபாய் அதிகமாக இருப்பதால் எங்களால் சர்வதேச விலைகளுக்கு ஜவுளி ஆர்டர்களைப் பெற இயலவில்லை. உள்நாட்டிலேயே பெரும்பாலானோர் வர்த்தகம் செய்வதால், தேவைக்கு அதிகமான வரத்து காரணமாக விலை சரிவடைந்து நஷ்டம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று விளக்கமளித்தார்.

"இதன் விளைவாக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பையும், தொழில்முனைவோர்கள் முதலீட்டையும் இழந்தனர். தற்போது பட்ஜெட்டில் எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள தொழில் முனைவோர்களுக்கான எந்த சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை" என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 100 கோடி வரையிலான கடன் திட்டம் குறித்தும் எம்.ஜெயபால் கருத்து தெரிவித்தார். "100 கோடி வரை எந்த அடமான பத்திரங்களும் இல்லாமல் கடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போல முன்பு அறிவித்த திட்டங்கள் ஏற்கனவே கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளால் கிடைக்கவில்லை. தற்போதும் இது போன்ற நிபந்தனைகளே விதிக்கப்பட்டுள்ளன" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, "மத்திய அரசு சர்வதேச விலையில் மூலப்பொருள் கிடைக்கச் செய்து ஏற்றுமதியை அதிகரிக்கும் சலுகைகளை அறிவிக்க வேண்டும்" என்று எம்.ஜெயபால் வலியுறுத்தினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...