மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத செயல்களை மேற்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OK. சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல் வீரர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...