தாராபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம் - 2.75 கோடி ரூபாய் நிதி வழங்க கோரிக்கை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தர்ணா போராட்டம். மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத 2.75 கோடி ரூபாய் நிதியை கோரி போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதியை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த சில மாதங்களாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த வாரம் பொதுமக்கள் ஆர்.டி.ஓ செந்தில் அரசனிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்திற்கு வரவேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை என்றும், இதனால் எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், "மக்களுக்கான பணிகளை செய்ய வளர்ச்சி கட்டணங்கள் வழங்கப்படாததால், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு எனது பஞ்சாயத்திற்கு வளர்ச்சி பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய வளர்ச்சி நிதியை வழங்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...