திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் உதவியுடன் தொடங்கியது. இது நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் வழங்குவாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த வாய்க்காலை வேர்கள் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் இருந்து மூலிக்குளம் வரை செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிதி உதவியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் (TEA) அறக்கட்டளை வழங்குகிறது. இந்த வாய்க்கால் திருப்பூர் நகரத்தின் மைய பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கி, பளையக்காடு, கருமாரபாளையம், மண்ணரை வழியாக மூலிக்குளத்தை அடைகிறது.



இந்த தூர்வாரும் பணியால், நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் குளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்பணியின் தொடக்க விழா ஜூலை 21, 2024 அன்று காலை 9.30 மணிக்கு அணைக்காடு Check dam பகுதியில் நடைபெற்றது.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் K.M சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இப்பணிக்கு உதவி கோரியபோது, உடனடியாக ஒப்புதல் அளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் K.M சுப்பிரமணியம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...