திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் உதவியுடன் தொடங்கியது. இது நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் வழங்குவாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த வாய்க்காலை வேர்கள் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் இருந்து மூலிக்குளம் வரை செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிதி உதவியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் (TEA) அறக்கட்டளை வழங்குகிறது. இந்த வாய்க்கால் திருப்பூர் நகரத்தின் மைய பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கி, பளையக்காடு, கருமாரபாளையம், மண்ணரை வழியாக மூலிக்குளத்தை அடைகிறது.



இந்த தூர்வாரும் பணியால், நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் குளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்பணியின் தொடக்க விழா ஜூலை 21, 2024 அன்று காலை 9.30 மணிக்கு அணைக்காடு Check dam பகுதியில் நடைபெற்றது.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் K.M சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இப்பணிக்கு உதவி கோரியபோது, உடனடியாக ஒப்புதல் அளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் K.M சுப்பிரமணியம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...