திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் உதவியுடன் தொடங்கியது. இது நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் வழங்குவாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த வாய்க்காலை வேர்கள் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் இருந்து மூலிக்குளம் வரை செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிதி உதவியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் (TEA) அறக்கட்டளை வழங்குகிறது. இந்த வாய்க்கால் திருப்பூர் நகரத்தின் மைய பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கி, பளையக்காடு, கருமாரபாளையம், மண்ணரை வழியாக மூலிக்குளத்தை அடைகிறது.



இந்த தூர்வாரும் பணியால், நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் குளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்பணியின் தொடக்க விழா ஜூலை 21, 2024 அன்று காலை 9.30 மணிக்கு அணைக்காடு Check dam பகுதியில் நடைபெற்றது.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் K.M சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இப்பணிக்கு உதவி கோரியபோது, உடனடியாக ஒப்புதல் அளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் K.M சுப்பிரமணியம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...