சிறுவாணி அணையில் தண்ணீர் திறப்பு: கேரள அரசைக் கண்டித்த எஸ்.பி. வேலுமணி

சிறுவாணி அணையில் 42 அடி தண்ணீர் தேங்கியதும் 1000 கன அடி தண்ணீரை திறந்துவிட்ட கேரள அரசை கண்டித்த எஸ்.பி. வேலுமணி, தமிழக அரசின் செயலற்ற நிலையை விமர்சித்தார். கோவையின் நீர் மேலாண்மை குறித்தும் கருத்து தெரிவித்தார்.


கோவை: தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, சிறுவாணி அணையில் இருந்து கேரள அரசு தண்ணீரை திறந்து விட்டதை கடுமையாக கண்டித்துள்ளார். கோவை துடியலூரில் நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் அசோசியேஷன் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

வேலுமணி கூறுகையில், "சிறுவாணி அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகும். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இது கோவை மாநகராட்சிக்கு பயன்பாட்டில் உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி வரை மட்டுமே தேக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் 50 அடி வரை தேக்க முடியும்," என்றார்.

"கடந்த ஜூலை 19 அன்று அணையில் 42 அடி தண்ணீர் தேங்கியவுடன், கேரள அரசு தன்னிச்சையாக 1000 கன அடி தண்ணீரை திறந்து விட்டது. இது அணையின் மொத்த நீர்த்தேக்கத்தில் 19 சதவீதம் ஆகும். கோவை மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் திமுக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை," என்று வேலுமணி குற்றம் சாட்டினார்.

அணையில் 50 அடி வரை நீரை முழுமையாக தேக்கினால், ஒரு வருடத்திற்கு கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாகவும், நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கியதாகவும் வேலுமணி கூறினார். ஆனால் தற்போது அத்தகைய பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதன் காரணமாக நொய்யல் ஆற்று நீர் வீணாக கடலில் கலக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

"தற்போது செங்குளம் மற்றும் குறிச்சிகுளத்திற்கு வரும் தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபதி குளத்திற்கு வரும் நீரும் பாலம் கட்டும் பணி காரணமாக தடுக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதற்கு ஆண்டு முழுவதும் நேரம் உள்ளது, ஆனால் மழைக்காலத்தில் வரும் நீரை சேமிக்க வேண்டியது அவசியம்," என்று வேலுமணி வலியுறுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தான் அமைச்சராக இருந்தபோது, ஆனைமலை நல்லாறு திட்டத்திற்காக கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசியதாகவும், அதற்கான குழு அமைக்கப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்தார். ஆனால் தற்போதைய அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இறுதியாக, தமிழக அரசு உடனடியாக கேரள அரசுடன் தொடர்பு கொண்டு சிறுவாணி அணையில் 50 அடி வரை நீரை தேக்க அனுமதி பெற வேண்டும் என்று வேலுமணி வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...