கோவையில் மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் - 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் இந்திய மன நல மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் மனதிற்கான ஓட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: இந்திய மன நல மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் "மனதிற்கான ஓட்டம்" என்ற பெயரில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் நடைபெற்றது.

பொது மக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மரத்தான் தொடர் ஓட்டம் கோவை நேரு அரங்கில் தொடங்கியது.



3, 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூரங்களில் ஓட்டங்கள் நடைபெற்றன. பொது மக்களிடம் மனஅழுத்தம் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1200க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் டிஜிபி Dr. ரவி IPS கலந்து கொண்டார். மேலும், தமிழ்நாடு மனநல சங்கத்தின் தலைவர் Dr. பன்னீர்செல்வம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையின் தலைவர் Dr. பிரியா கார்த்திக்பிரபு, கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தலைவர் Dr. பிரதீப் மற்றும் உறுப்பினர்களான Dr. ஸ்ரீனிவாசன், Dr. வெங்கடேஷ்குமார், Dr. மணி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர்.

இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு சேப்டரின் 39வது மாநில மாநாடு வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் கோவை ஜென்னிஸ் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது. "மனநல மருத்துவ துறையின் புதுமைகள்" என்ற தலைப்பில் கொங்குநாடு மனநல மருத்துவ சங்கம் இந்த மாநாட்டை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இதர பகுதிகளில் இருந்து சுமார் 800 மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல முதுகலை பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய உள்ளனர்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளான AIIMS, NIMHANS, JIPMER ஆகியவற்றின் மனநல மருத்துவர்களின் உரையாற்றல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், மனநல மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களின் சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் இதில் அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மனநல மருத்துவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும். இந்த புதுமைகள் மனநோயாளிகளின் சிகிச்சையில் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...