பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் - உடனடி சீரமைப்பு தேவை

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைப்பால் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, குடிநீர் விநியோக பாதிப்பு ஆகியவற்றால் உடனடி சீரமைப்பு தேவை என மக்கள் கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (ஜூலை 20) மதியம் நடந்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியின் பிரதான குடிநீர் குழாய் தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் வீணானது. குழாய் உடைப்பை சரி செய்த நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, சாலையின் மையத்தில் பெரிய குகை போன்ற பள்ளம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, வாகனங்களை ஓரமாக செல்லும்படி அறிவுறுத்தினர். சில மாதங்களுக்கு முன்புதான் இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையால் ரவுண்டானா அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக ரவுண்டானா பகுதியிலும் பிளவுகள் ஏற்பட்டு, மண்ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது. மேலும், அதனைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், பொள்ளாச்சி நகரில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து பாதிப்பு மற்றும் குடிநீர் விநியோக பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...