கோவை மேட்டுப்பாளையம் அருகே மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க தீவிர வாகன சோதனை

கோவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கேரள மாநில எல்லையான முள்ளி வனப்பகுதியில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளனரா மற்றும் நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முள்ளி வழியே உள்ளூர் பழங்குடியின மக்களை தவிர பிறர் கேரளாவிற்குள் நுழையவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் மலைப்பாதையில் கேரள எல்லையோரம் முள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இச்சோதனை சாவடியை கடந்து பில்லூர் அணைப்பகுதி மற்றும் கேரள பகுதிகள் செல்லும் வாகனங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த தேச விரோத கருத்துக்கள் மற்றும் தமிழக எல்லையோரம் உள்ள கேரள வனப்பகுதி மலைக்கிராமங்களில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் உள்ளிட்ட சம்பவங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்பு இருக்கலாம் என நக்சல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. முள்ளி வழியே சுமார் முந்நூறு மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள கேரள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே தகுந்த ஆவணங்களை காட்டி கடந்து செல்ல முடியும்.

மேலும் இவ்வழியே பில்லூர் அணை பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மற்றும் கேரள அரசால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் முள்ளி சோதனை சாவடி பகுதியில் ஒட்டப்பட்டு தற்போது கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...