கோவை மேட்டுப்பாளையம் அருகே மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க தீவிர வாகன சோதனை

கோவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கேரள மாநில எல்லையான முள்ளி வனப்பகுதியில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளனரா மற்றும் நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முள்ளி வழியே உள்ளூர் பழங்குடியின மக்களை தவிர பிறர் கேரளாவிற்குள் நுழையவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் மலைப்பாதையில் கேரள எல்லையோரம் முள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இச்சோதனை சாவடியை கடந்து பில்லூர் அணைப்பகுதி மற்றும் கேரள பகுதிகள் செல்லும் வாகனங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த தேச விரோத கருத்துக்கள் மற்றும் தமிழக எல்லையோரம் உள்ள கேரள வனப்பகுதி மலைக்கிராமங்களில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் உள்ளிட்ட சம்பவங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்பு இருக்கலாம் என நக்சல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. முள்ளி வழியே சுமார் முந்நூறு மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள கேரள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே தகுந்த ஆவணங்களை காட்டி கடந்து செல்ல முடியும்.

மேலும் இவ்வழியே பில்லூர் அணை பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மற்றும் கேரள அரசால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் முள்ளி சோதனை சாவடி பகுதியில் ஒட்டப்பட்டு தற்போது கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...