கோவை 27வது வார்டில் தூய்மைப் பணிகள் தீவிரம்: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி சில்ட்ரன் ஸ்கூல் முன்பு மற்றும் துரைசாமி லே-அவுட் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டன. இந்த பணிகள் ஜூலை 20 அன்று நடைபெற்றன.



வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி உடனிருந்தார்.



மேலும், பீளமேடு ஜெகநாதபுரம், டிஸ்பென்சரி ரோடு பகுதிகளிலும் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்றன.



இங்கு தினசரி குப்பை வாங்கும் வாகனம் சரியாக வருகிறதா என்பதையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார்.



சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டதை உறுதி செய்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...