கோவை வடவள்ளியில் பேக்கரி ஊழியரிடம் கொள்ளை முயற்சி: மூவர் கைது

கோவை வடவள்ளியில் பேக்கரி ஊழியர் ஒருவரிடம் கத்தியால் மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 19 அன்று நடந்தது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவரை கத்தியால் மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வடவள்ளி ஜெயா நகரில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரியும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவநாதன் (25) என்பவர், வடவள்ளி அருகே உள்ள ஆவின் நிலையம் அருகே நண்பர் ஒருவரைப் பார்க்க நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் ஜீவநாதனிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தர மறுத்ததால், ஜீவநாதனின் வயிற்றில் கத்தியை வைத்து மிரட்டினர். ஜீவநாதன் சத்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மூவரையும் மடக்கிப் பிடித்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியவர்கள் கஸ்தூரிநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நிரஞ்சன் (23), வடவள்ளியைச் சேர்ந்த அர்ஜூன் (20), சபரிகிரி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸார் ஜூலை 19 அன்று கைது செய்தனர்.

இச்சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...