பொள்ளாச்சி அருகே கோழிப் பண்ணை இடிந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது.



இந்த கோழிப் பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர். பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோழிப் பண்ணை சரிந்து விழுந்ததில், கோழிப் பண்ணையின் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.



இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மெமதாசிங் (33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



படுகாயம் அடைந்த முருகானந்தம் (45), ரேவதி (40), ரவிசிங் (46), கொனாமிகா (20) ஆகிய நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...