கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 200 இடங்களுக்கான சரிபார்ப்பு நடைபெறும். பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 23-ல் சரிபார்ப்பு நடத்தப்படும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU-வில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் காலியிடங்களுக்கு நகர்வு அடிப்படையில், தரவரிசையில் அடுத்ததாக இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்புப் பணிகள் மொத்தம் 200 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பட்டயப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...