கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 200 இடங்களுக்கான சரிபார்ப்பு நடைபெறும். பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 23-ல் சரிபார்ப்பு நடத்தப்படும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU-வில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் காலியிடங்களுக்கு நகர்வு அடிப்படையில், தரவரிசையில் அடுத்ததாக இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்புப் பணிகள் மொத்தம் 200 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பட்டயப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...