கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 200 இடங்களுக்கான சரிபார்ப்பு நடைபெறும். பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 23-ல் சரிபார்ப்பு நடத்தப்படும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU-வில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் காலியிடங்களுக்கு நகர்வு அடிப்படையில், தரவரிசையில் அடுத்ததாக இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்புப் பணிகள் மொத்தம் 200 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பட்டயப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...