கோவை தடாகம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்: குடியிருப்பு வாசிகள் வீடியோ பதிவு

கோவை தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பேரூர், தொண்டாமுத்தூர், நரசீபுரம், தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை கோழி, ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியானது.



கடந்த வாரம் தொண்டாமுத்தூர் வண்டிக்காரன் புதூர் பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியான நிலையில், வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால், அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை.



தற்போது, தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறையினர் சமீப காலமாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...