கோவை கொடிசியா வளாகத்தில் 8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் 8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 அன்று தொடங்கியது. ஜூலை 28 வரை நடைபெறும் இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா அமைப்பு இணைந்து நடத்தும் '8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா'வின் துவக்க விழா ஜூலை 19 மாலை நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர்.



ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.



மேலும் 285 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த புத்தகத் திருவிழாவில் தினம்தோறும் பல்வேறு இலக்கிய கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்வுகள், இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்ட நூலக துறை மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து நடத்தும் இப்புத்தக திருவிழாவில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...