உடுமலை அருகே திருமூர்த்திமலையில் வெள்ளம் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும், வெள்ள பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த ஒத்திகை பயிற்சியில் கோவில் செயல் அலுவலர் அமரநாதன், கோவில் ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தத்ரூபமாக இருந்ததால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது. பின்னர் இது ஒத்திகை பயிற்சி என்று தெரிந்ததும் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த பயிற்சி மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...