மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் பாதிப்பு: முதல்வரிடம் தொழிலதிபர்கள் கோரிக்கை

தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிலதிபர்கள் எச்சரிக்கின்றனர்.


Coimbatore: தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர்கள் கூறியுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2022ஆம் ஆண்டில் தமிழக மின்சார வாரியம் நிலைக் கட்டணத்தை 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக (430 சதவீதம்) உயர்த்தியது. மேலும் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தையும் 20 சதவீதம் உயர்த்தியது. இந்த உயர்வால் பாதிக்கப்பட்ட 420 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மின்கட்டணத்தை குறைக்கக் கோரி 8 கட்ட இயக்கங்களை நடத்தியதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


தமிழக முதல்வர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தற்போது மின்சார வாரியம் மீண்டும் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளதாக தொழிலதிபர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் 97 சதவீத குறு, சிறு தொழில்கள் ஜாப் ஆர்டர்களாகவும், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களாகவும் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 8 சதவீதம் கூட லாபம் இல்லாமலும், நிலையான ஆர்டர்கள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்துவது தொழில்துறையினர் மீது பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.


இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், உள்ளூரிலும் வேலைவாய்ப்பு வழங்கி வரும் குறு, சிறு தொழில்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் தொழிலதிபர்கள் எச்சரித்தனர்.


எனவே, தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்க உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தையும் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...