கோவை தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி: வழக்கறிஞர்கள் மீது வழக்கு

கோவையில் தொழிலதிபர் ஜேம்ஸிடம் ரூ.9.14 கோடி மோசடி செய்த வழக்கறிஞர்கள் ராஜேஷ் மற்றும் ஆனந்தி மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து ஏலம் மற்றும் பிட்காயின் முதலீடு என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராம்நகர் காளிதாஸ் வீதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜேம்ஸ், பீளமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோரால் ரூ.9.14 கோடி மோசடிக்கு ஆளானார். இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு வழக்கு விஷயமாக வழக்கறிஞர்களை அணுகிய ஜேம்ஸ், பின்னர் அவர்களுடன் நட்பாக பழகி வந்தார். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஏலத்திற்கு வரும் சொத்துக்களை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பிய ஜேம்ஸ், சொத்துக்களை வாங்குவதற்காக பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்.

மேலும், ஆனந்தி தான் நீதிபதி தேர்வுக்கு பயிற்சி பெற்று வருவதாகவும், வேலையில் சேர்வதற்கு ரூ.25 லட்சம் வேண்டும் என்றும் கூறி ஜேம்ஸிடம் பணம் பெற்றுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு பெற்ற வழக்கறிஞர்கள், ஜேம்ஸிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறினர்.

இதனை நம்பிய ஜேம்ஸ், ரூ.8 கோடி 64 லட்சத்து 90 ஆயிரத்தை முதலீடு செய்தார். நீண்ட நாட்கள் ஆகியும் லாபம் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ், வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

மொத்தம் ரூ.9 கோடியே 14 லட்சத்தை இழந்த ஜேம்ஸ், இது குறித்து ஜூலை 17 அன்று பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...