மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கோவை சிறு, குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தல்

கோவை கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் அமைப்புகள் கூட்டம் நடத்தி, மின்கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். நிலைக்கட்டணம் குறைப்பு, பழைய கட்டண முறை மீண்டும் அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் பல்வேறு சிறு, குறு தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.





இக்கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வால் தொழில்துறையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.





கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா மற்றும் சிறு குறு தொழில் அமைப்பினர், தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், பழைய மின் கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொழில்துறையினருக்கான நிலைக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பழைய கட்டண முறையின்படி நிலை கட்டணம் 35 ரூபாயாக இருந்தபோது தொழில்துறையினர் பலனடைந்து வந்ததாகவும், தற்போது 160 ரூபாயாக நிலை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கோவையின் பிரதான உற்பத்தி தொழிலாக உள்ள பம்ப் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பவுண்டரி தொழில்கள், மழைக்காலத்தில் சரிவை சந்தித்து வரும் சூழலில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்கும்போதும் நிலை கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றனர். இது சிறு, குறு தொழில்களை மேலும் நலிவடையச் செய்யும் எனவும், எனவே நிலை கட்டணத்தை பழைய படி அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும், சூரிய தகடு மின்சார உற்பத்திக்கு நெட்வொர்க்கிங் சார்ஜஸ் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விவரிக்க உள்ளதாகவும் கொடிசியா மற்றும் தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...