கோவையில் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதிமுக இளைஞரணி மனு

கோவை மாநகர போக்குவரத்து ஆணையரிடம் மதிமுக இளைஞரணியினர் தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மனு அளித்தனர். நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து ஆணையரை இன்று (ஜூலை 18) சந்தித்த மதிமுக இளைஞரணியினர், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் (Peak Hours) மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் மீறி இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் இராஜீவ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...