கோவையில் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதிமுக இளைஞரணி மனு

கோவை மாநகர போக்குவரத்து ஆணையரிடம் மதிமுக இளைஞரணியினர் தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மனு அளித்தனர். நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து ஆணையரை இன்று (ஜூலை 18) சந்தித்த மதிமுக இளைஞரணியினர், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் (Peak Hours) மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் மீறி இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் இராஜீவ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...