கோவையில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளாவைச் சேர்ந்த 11 பேர் கைது

கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ஜூலை 17 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு குழுவினரை அவர்கள் கவனித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்தக் குழுவினரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

1. முகமத் யாதின் (வயது 40) - கேரளா, காசர்கோடு

2. சுனில் (வயது 45) - கேரளா, காசர்கோடு

3. அப்துல் கரீம் (வயது 47) - கேரளா, கண்ணூர்

4. சலீம் மாலிக் (வயது 25) - திருப்பூர் மங்கலம்

5. ஷாஜகான் (வயது 26) - திருப்பூர் மங்கலம்

6. சாமல் (வயது 46) - கேரளா, கண்ணூர்

7. நவ்பீல் காசிம் ஷேக் (வயது 29) - கர்நாடகா

8. முகமது யாசீர் (வயது 18) - திருப்பூர் காங்கேயம்

மேலும் மூன்று பேரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தக் குழுவில் இருந்த சரவணன் என்பவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...

குப்பேபாளையத்தில் நாளை (18.08.2026) மின்தடை அறிவிப்பு

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பேபா...

பாதசாரி மீது பைக் மோதல்: தலையில் பலத்த காயம், இளைஞர் மீது வழக்கு

கோவை தெலுங்குபாளையம் சாலையில் நடந்து சென்ற 55 வயது நாகராஜ் மீது கட்டுப்பாட்டை இழந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயம்....

சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உய...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...