கோவையில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளாவைச் சேர்ந்த 11 பேர் கைது

கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ஜூலை 17 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு குழுவினரை அவர்கள் கவனித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்தக் குழுவினரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

1. முகமத் யாதின் (வயது 40) - கேரளா, காசர்கோடு

2. சுனில் (வயது 45) - கேரளா, காசர்கோடு

3. அப்துல் கரீம் (வயது 47) - கேரளா, கண்ணூர்

4. சலீம் மாலிக் (வயது 25) - திருப்பூர் மங்கலம்

5. ஷாஜகான் (வயது 26) - திருப்பூர் மங்கலம்

6. சாமல் (வயது 46) - கேரளா, கண்ணூர்

7. நவ்பீல் காசிம் ஷேக் (வயது 29) - கர்நாடகா

8. முகமது யாசீர் (வயது 18) - திருப்பூர் காங்கேயம்

மேலும் மூன்று பேரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தக் குழுவில் இருந்த சரவணன் என்பவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...