சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு: சிகிச்சை பலனின்றி மற்றொருவர் பலி

கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி மற்றொருவர் உயிரிழந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த அழகர்ராஜா (24), முத்துக்குமார் (23), கருப்புசாமி (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நான்கு பேரில், தினேஷ்குமார் (23), மனோஜ் (24), பாண்டீஸ்வரன் (27) மற்றும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வீரமணி (21) ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரமணி ஜூலை 16 அன்று உயிரிழந்தார். இதன் மூலம் சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சோகமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...