ஆழியார் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் கிடுகிடுவென உயர்ந்து 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனை அடுத்து அங்கிருந்து உபரி நீர் ஆழியார் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.



நேற்று காலை 95.80 அடியாக இருந்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 101.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5.3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது வினாடிக்கு 3,814 கன அடி நீர் வரத்து உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்றும் அவர்கள் கூறினர்.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நீர் இருப்பு வரும் காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...