ஆழியார் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் கிடுகிடுவென உயர்ந்து 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனை அடுத்து அங்கிருந்து உபரி நீர் ஆழியார் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.



நேற்று காலை 95.80 அடியாக இருந்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 101.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5.3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது வினாடிக்கு 3,814 கன அடி நீர் வரத்து உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்றும் அவர்கள் கூறினர்.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நீர் இருப்பு வரும் காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...