மேட்டுப்பாளையம் பகுதி பேருந்துகளில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஜூலை 17 அன்று காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் ஆகியவற்றில் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக்குப் பின்னர், அதிகாரிகள் பயணிகளிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினர். பேருந்து ஓட்டுனர்கள் அதிவேகமாக ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல், நடத்துனர் பயணிகளை படியில் தொங்கும்படி அனுமதித்தல், ஏர் ஹாரன் அல்லது மியூசிக்கல் ஹாரன் பயன்படுத்துதல், போநட் (Bonnet) அதாவது என்ஜின் மேற்பகுதியில் யாரையாவது அமரவைத்து செல்லுதல் போன்ற விதிமீறல்களை கண்டால், பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து RTO அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு புகார் அளித்தால் ஒரு மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...